கல்முனையில் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்டது..! மரணத்தில் சந்தேகமா..?

ஆசிரியர் - Editor I
கல்முனையில் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்டது..! மரணத்தில் சந்தேகமா..?

அம்பாறை- கல்முனையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்.நெல்லியடியை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது. 

நெல்லியடியைச் சேர்ந்த கமல்ராஜ் (வயது 21) என்பவர் கல்முனை உள்ள தேசிய புலனாய்வுச் சேவையின் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் பணியாற்றியிருந்த நிலையில் நேற்று உயிரிழந்த நிலையில் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவர் காதல் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டிருந்த நிலையில், அவருடைய சடலம் பிரேத பரிசோதனைக்காக 

யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை அவரின் உயிரிழப்பு தொடர்பான சந்தேகத்தை மேலும் வலுவடைய வைத்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு