கட்டுப்பாட்டை இழந்து புகைரத பாதை மீது மோதிய டிப்பர்..! சாரதி தப்பி ஓட்டம், பளை பொலிஸார் தீவிர விசாரணையில்..

ஆசிரியர் - Admin
கட்டுப்பாட்டை இழந்து புகைரத பாதை மீது மோதிய டிப்பர்..! சாரதி தப்பி ஓட்டம், பளை பொலிஸார் தீவிர விசாரணையில்..

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து ஆனையிறவு பகுதியில் புகைரத பாதை மீது மோதி விபத்துக்குள்ளான நிலையில், சாரதி தப்பி ஓடியுள்ளார். 

இந்த சம்பவம் இன்று அதிகாலை ஆனையிறவு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். குறித்த டிப்பர் வாகனத்தில் மணல் நிரப்பபட்டிருந்த நிலையில், 

கள்ள மணலாக இருக்கலாம் என கூறியுள்ள பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு