யாழ்.நெல்லியடியை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கல்முனையில் சடலமாக மீட்பு..!

ஆசிரியர் - Editor IV
யாழ்.நெல்லியடியை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கல்முனையில் சடலமாக மீட்பு..!

அரச புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர் கடமை அறையில்  துப்பாக்கியால் சுட்டு  மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று மாலை 7 மணியளவில் அம்பாறை - கல்முனை பொலிஸ் நிலையத்தில் உள்ள அரச புலனாய்வு பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இத் துப்பாக்கி சூட்டில் மரணமானவர் யாழ்ப்பாணம் நெல்லியடியை  சேர்ந்த   கமல்ராஜ் (21) என்ற   அரச புலனாய்வு உத்தியோகத்தராவார்.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு பிரிவு காரியாலயத்தில் கடமையாற்றிவரும் குறித்த உத்தியோகத்தர் சம்பவதினமான இன்று மாலை 6.30 மணியளவில்  காரியாலயத்தில் தனிமையில் இருந்துள்ள நிலையில் பாதுகாப்புக்காக வைத்திருந்து (பிஸ்டல்) கைதுப்பாக்கியால் தனக்கு தானே தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை இடம்பெற்று வருவதாக  கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு