படையினரின் சீருடை, கைகுண்டுகள், ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது..! அகழ்வு நடாத்தி ஆராய தீர்மானம், கிளிநொச்சி- புலோப்பளையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
படையினரின் சீருடை, கைகுண்டுகள், ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது..! அகழ்வு நடாத்தி ஆராய தீர்மானம், கிளிநொச்சி- புலோப்பளையில் சம்பவம்..

கிளிநொச்சி- புலோப்பளை பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை துப்புரவு செய்யும்போது இராணுவத்தினரின் சீருடை, கைகுண்டு, அடையாள அட்டை உள்ளிட்ட பல ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை துப்புரவு செய்யும்போதே இந்த ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை, சாரதி அனுமதி பத்திரம் மற்றும் சில ஆவணங்களும், இராணுவ சீருடை, கைகுண்டுகள் 

ஆகியனவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து பளை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்தில் ஆராய்ந்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவை பெற்று குறித்த பகுதியில் 

அகழ்வு நடாத்த தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு