4 மீனவர்களுடன் இந்திய இழுவை படகு இலங்கைக்குள் நுழைந்ததா..? இலங்கை கடற்படையின் உதவியைகோரும் இந்தியா..

ஆசிரியர் - Editor I
4 மீனவர்களுடன் இந்திய இழுவை படகு இலங்கைக்குள் நுழைந்ததா..? இலங்கை கடற்படையின் உதவியைகோரும் இந்தியா..

இந்தியா- தமிழகத்தில் இருந்து நேற்று முன்தினம் கடற்றொழிலுக்காக சென்ற படகும் 4 மீனவர்களும் காணாமல்போன நிலையில் அவர்கள் இலங்கைக்குள் வந்தனரா? என்பதை அறிய இலங்கை கடற்படையினரின் உதவி நாடப்பட்டிருக்கின்றது. 

தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 718 இலக்கமுடைய ரோலர் படகில் 4 மீனவர்கள் புறப்பட்ட நிலையில் அவர்கள் திரும்ப கரை திரும்பாததுடன், படகு மற்றும் அதில் இருந்த 4 மீனவர்கள் தொடர்பில் எந்த தவலும் இல்லாத நிலையிலேயே 

மேற்படி படகு இலங்கை கரையை அடைந்ததா என இலங்கை கடற்படையினரிடம் கோரப்பட்டுள்ளது. இதேநேரம் இவ்வாறு காணமல்போன படகினைத் தேடி இந்திய விமானப்படைக்குச் சொந்தமான உரங்குவானூர்தி ஒன்று கச்சதீவை அண்டிய பகுதிவரை தேடுதல் மேற்கொண்டு பறப்பில் ஈடுபட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு