சற்றுமுன்னர் பூநகரியில் கோர விபத்து!! ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்!!

ஆசிரியர் - Admin

பூநகரி- மன்னார் வீதியில் 4ம் கட்டை பகுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனம் வீதியின் குறுக்கே நுழைந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் 

ஜெயபுரம் பகுதியை சேர்ந்த செ.தவராஞ்சன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். இதே சம்பவத்தில் ஜெயபுரம் பகுதியை சேர்ந்த செ.வசந்தகுமார் (வயது 41) என்ற 4 பிள்ளைகளின் தந்தை காயமடைந்துள்ளார். 

சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு