வவுனியாவில் 4 கடற்படையினருக்கு கொரோனா..! பரிசோதனையில் உறுதியானது..

வவுனியா பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 4 கடற்படையினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த 22 ஆம் திகதி இரவு
அம்முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் 276 பேர்இ வவுனியாஇ பம்பைமடு மற்றும் பெரியகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர்.பரிசோதனையின் போது பெரியகாடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த
4 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதாவது இதில் மூவருக்கு நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்
இன்று காலை மேலும் ஒருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.