19 மணி நேர பயணம்!! -சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்த விண்வெளி வீரர்கள்-

ஆசிரியர் - Editor III
19 மணி நேர பயணம்!! -சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்த விண்வெளி வீரர்கள்-

நாசா விண்வெளி வீரர்கள் 19 மணி நேர பயணத்திற்கு பிறகு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்துள்ளனர்.

நாசாவை சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பபட்டனர்.

நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்களை அழைத்துக் கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் நேற்று முன்தினம் வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது. 

நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி  2  வீரர்களும் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் நுழைந்தனர், கிட்டத்தட்ட 19 மணிநேர பயணத்திற்கு சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்தை சென்றடைந்தனர்.

விண்வெளி மையத்தில் அவர்களை அமெரிக்க விண்வெளி வீரர் கிறிஸ் காசிடி, விண்வெளி வீரர்களான அனடோலி இவானிஷின் மற்றும் இவான் வாக்னர் ஆகியோர் வரவேற்றனர், 

நாசா நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் ஹ_ஸ்டனில் பணி கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து  சர்வதேச  விண்வெளி  ஆய்வு குழுவினருடன் பேசினார்.

பாப் மற்றும் டக் ஆகியோர் வருக உலகம் முழுவதும் இந்த பணியைக் கண்டுள்ளதாக நான் உங்களுக்குச் சொல்வேன், எங்கள் நாட்டிற்காக நீங்கள் செய்த எல்லாவற்றிற்கும் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என கூறினார். 

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகம் சூழ்ந்திருக்கும் இந்த நேரத்தில் இந்த பணி அமெரிக்கர்களை ஊக்குவிக்கும் என்று தான் நம்புவதாக விண்வெளி வீரர் ஹர்லி கூறினார்.

கடந்த பல மாதங்களாக, இந்த உயர்ந்த இலக்குகளை அடைய, குறிப்பாக அமெரிக்காவில் உள்ள இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக,  நாம் காட்டிய ஒரு முயற்சி இது," என்று அவர் மேலும் கூறினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு