வவுனியாவில் வாள்வெட்டு, கத்தி குத்து சம்பவங்களில் மூவர் காயம்!

ஆசிரியர் - Admin
வவுனியாவில் வாள்வெட்டு, கத்தி குத்து சம்பவங்களில் மூவர் காயம்!

வவுனியாவில் இரவேறு இடங்களில் நடந்த கத்திக்குத்து, வாள்வெட்டு சம்பவங்களில் இரு பெண்கள் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காதல் விவகாரம் காரணமாக கற்பகபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் படுகாமடைந்துள்ளனர்.

அலகல்லு பகுதியில் இடம்பெற்ற மற்றொரு கத்திகுத்து சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவங்கள் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு