பூநகரி- பரந்தன் வீதியில் கோர விபத்து..! தாய் பலி, மகள் ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor I
பூநகரி- பரந்தன் வீதியில் கோர விபத்து..! தாய் பலி, மகள் ஆபத்தான நிலையில்..

கிளிநொச்சி- பரந்தன் பூநகரி வீதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் தாய் உயிரிழந்துள்ள நிலையில், மகள் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

இன்று காலை10.30 மணியளவில் பூநகரியிலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சியை சேர்ந்த சுப்பிரமணியம் அன்னலட்சுமி (வயது 64) என்ற வயோதிப பெண்மணி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் மகள் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் டிப்பர் வாகனத்தில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகனம் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டிருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு