தேசிய தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படத்துடன் மீட்கப்பட்டது பெண் போராளியின் எலும்பு மீதிகள்..! துப்பாக்கிகள், தகடு, ரவைகளும் மீட்பு..

ஆசிரியர் - Editor I
தேசிய தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படத்துடன் மீட்கப்பட்டது பெண் போராளியின் எலும்பு மீதிகள்..! துப்பாக்கிகள், தகடு, ரவைகளும் மீட்பு..

கிளிநொச்சி- முகமாலை பகுதியில் மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்ட இடத்தில் அகழ்வு பணிகள் இன்று நிறுத்தப்பட்டு யூன் மாதம் 2ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. 

இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின்போது T-81 ரக துப்பாக்கிகள் 3, துப்பாக்கி ரவைகள் 75, கை குண்டுகள் 2, த.வி.பு ஞா 0164 இலக்க தகடு, சீருடை, 8 ரவை கூடுகள், தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படம் 

மற்றும் எலும்பு மிகுதிகளும் மீட்கப்பட்டிருக்கின்றது. மீட்கப்பட்ட எலும்பு மிகுதிகள் ஒருவருடையது என கூறப்படுவதுடன், அது பெண்ணுடையது எனவும் கூறப்படுகின்றது. 

இந்நிலையில் அகழ்வு பணிகள் யூன் மாதம் 2ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு