பூநகரி- மன்னார் வீதி பாலம் புனரமைக்கப்படுகிறது..! திருடர்கள் தலைமறைவு, கைது செய்யப்படுவார்களா..?

ஆசிரியர் - Editor I
பூநகரி- மன்னார் வீதி பாலம் புனரமைக்கப்படுகிறது..! திருடர்கள் தலைமறைவு, கைது செய்யப்படுவார்களா..?

பூநகரி- பரந்தன் வீதியில் உள்ள குடமுருட்டி பாலத்தின் பாகங்கள் திருடப்பட்ட நிலையில் திருடப்பட்ட பாகங்களை மீள பொருத்தும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

பாலத்தின் பாகங்கள் திருடப்பட்ட நிலையில் பாலம் ஊடான போக்குவரத்து தடைப்பட்டது. இந்நிலையில் திருத்தப் பணிகள் நேற்று சனிக்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் சி.எம்.மொறாயஸின் நேரடிக் கண்காணிப்பில் கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்டு பாலத்தின் பாகங்களை 

பொருத்தும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகிறது.திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டும் குற்றவாளிகள்தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் இதுவரை கைது செய்யப்படவில்லை. 

என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு