அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயார்!! -ஆவேசம் கொள்ளும் சீனா-

ஆசிரியர் - Editor III
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயார்!! -ஆவேசம் கொள்ளும் சீனா-

அமெரிக்கா தன்னை திருத்திக் கொண்ட பின்னர் மற்ற நாடுகள் மீது குற்றம்சாட்டுவதை பற்றி சிந்திக்க வேண்டும் என்று சீனா கூறியுள்ளது. 

சீன நாடாளுமன்றத்தின் செய்தித்தொடர்பாளர் ஹாங் யேசூயி செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

உலகில் கொரோனா வைரஸ் பரவியதற்கு சீனாதான் காரணம் என்பதை நாங்கள் ஏற்க முடியாது. இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இதற்காக அமெரிக்கா எங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருப்பதையும் ஏற்க முடியாது. இது சர்வதேச உறவுகளின் விதிமுறைகளை மீறி சர்வதேச சட்டங்களை மீறி நடப்பதாகும்.

அமெரிக்கா ஏதேனும் சட்டநடவடிக்கை எடுத்தாலோ அல்லது மசோதா கொண்டு வந்தாலோ அதை சீனா கடுமையாக எதிர்க்கும். அவ்வாறு அமெரிக்கா ஏதேனும் செய்தால் அதற்கு சீனா தரப்பில் கடும் பதிலடி நடவடிக்கைகள் இருக்கும்.

அமெரிக்கா முதலில் மற்ற நாடுகள் மீது குற்றம்சாட்டுவதை நிறுத்த வேண்டும், தன்னுடைய நாட்டில் நிலவும் சொந்த பிரச்சினைகள் மீது கவனம் செலுத்த வேண்டும், சொந்த பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் அமெரிக்காவின் செயல் பொறுப்பானது அல்ல.

அமெரிக்காவின் சட்ட நடவடிக்கையையும் ஏற்க மாட்டோம், இழப்பீடு கோருவதையும் ஏற்க முடியாது. கொரோனா பரவலை பொறுத்தவரை சீனா சிறப்பாகச் செயல்பட்டு வைரஸைக் கட்டுப்படுத்தியது. ஏராளமான தியாகங்களைச் செய்து கொரோனா போரில் சீனா வென்றுள்ளது.

சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து உலகிற்கு வெளிப்படைத்தன்மையுடனே அனைத்து தகவல்களையும் சீனா தெரிவித்துவந்தது.

உலக சுகாதார அமைப்புக்கும் அனைத்து தகவல்களையும் கூறி உள்ளோம், உலக நாடுகளுக்கும் சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்தோம். கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகங்களில் இருந்து பரவியது எனும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. 

இது முழுமையாக அறிவியல் சார்ந்த விடயம். அறிவியல் அறிஞர்கள், ஆய்வாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் ஆய்வு செய்து அவர்கள் முடிவு செய்யட்டும் என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு