கொரோனாவால் அலறும் இந்தியா!! -24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு தொற்று-

ஆசிரியர் - Editor III
கொரோனாவால் அலறும் இந்தியா!! -24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு தொற்று-

இந்தியாவில் என்றும் இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில்  கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு  6,654‬  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் தினம் தினம் புதிய உச்சம் ஏற்படுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.   

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,25,101 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 51,784 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,720 ஆக அதிகரித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு