முதியவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய ரவுடிகளை பாதுகாக்கும் பொலிஸார்..! 15 வயது சிறுவன் உட்பட சாட்சிகளுக்கு அச்சுறுத்தல், கண்டித்து மக்கள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
முதியவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய ரவுடிகளை பாதுகாக்கும் பொலிஸார்..! 15 வயது சிறுவன் உட்பட சாட்சிகளுக்கு அச்சுறுத்தல், கண்டித்து மக்கள் போராட்டம்..

வாள்வெட்டு தாக்குதல் நடாத்திய ரவுடிகளை பாதுகாக்கும் பொலிஸார், தாக்குதல் சம்பவம் தொடர்பாக சாட்சியம் வழங்கியவர்களை கைது செய்து அச்சுறுத்துவதுடன் 15 வயது சிறுவனை கை விலங்கிட்டு கைது செய்ததாக கூறி கிளிநொச்சி- யூனியன்குளம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடாத்தியுள்ளனர். 

இன்று காலை 10.30 மணியளவில் கிராம அபிவிருத்தி சங்க்திற்கு முன்பாக மேற்படி போராட்டம் இடம்பெற்றது. கடந்த மாதம் 28ம் திகதி குறித்த பகுதியில் இடம்பெற்ற தாக்கதல் சம்பவம் ஒன்று தொடர்பில் பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை. என தெரிவித்தும், 

பாதிக்கப்பட்ட நபர் நீண்ட காலமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சந்தேக நபர்களிற்கு பொலிசார் பாதுகாப்பு வழங்கியதாகவும், அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லை. என தெரிவித்துமே குறிதத் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது, 

குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தலையில் வெட்டுக்குள்ளானதுடன், அவரது மண்டை ஓட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளத. குறிதத் நபருக்கு எதிர்வரும் 16ம் திகதி சத்திர சிகிச்சை இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு நீதி கோரியே குறிதத் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை குறிதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சாட்சியம் அளித்த நபர்களை இலக்கு வைத்து நேற்று முந்தினம் கைதுகள் இடம்பெற்றதாகவும், முன்னர் தாக்குதல் மேற்கொண்ட நபரின் வீட்டினை தாக்கியதாக தெரிவித்து சாட்சியாளர்களை இலக்குவைத்தே குறித்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாகவும் 

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர். பொலிஸார் பக்கசார்பாக நடந்துகொள்கின்றனர் எனவும், 15வயதுடைய பாடசாலை மாணவனை விலங்கிட்டு நீதிமன்றுக்கு அழைத்து வந்திருந்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொலிசாரின் பக்கசார்பான செயற்பாடுகளை கண்டிக்கும் வகையிலும், 

நீதி கோரியும் குறித்த போராட்டம் பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிறைந்த காலப்பகுதியில் சமூக இடைவெளியை பேணியவாறு குறிதத் கவன ஈர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு