இந்தியாவில் கை கழுவ வசதி இல்லாத பரிதாபத்தில் 5 கோடி பேர்!! -ஆய்வில் அதிர்ச்சி தகவல்-

ஆசிரியர் - Editor III
இந்தியாவில் கை கழுவ வசதி இல்லாத பரிதாபத்தில் 5 கோடி பேர்!! -ஆய்வில் அதிர்ச்சி தகவல்-

இந்தியாவில் 5 கோடிக்கும் மேற்பட்டோர் கை கழுவும் வசதி கூட இல்லாமல் பரிதாப நிலையில் உள்ளனர் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா அபாயம் குறித்து வாஷிங்டன் பல்கலைக்கழகம் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், உலகில், ஏழை, நடுத்தர வருவாய் நாடுகளான 46 நாடுகளில் மொத்தம் 200 கோடிபேர், கை கழுவுவதற்கு சோப்பு, சுத்தமான தண்ணீர் இல்லாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மேலும், இந்தியாவில் 5 கோடிக்கும் மேற்பட்டோர் கை கழுவும் வசதி இல்லாமல் இருப்பதால், கொரோனா பாதிப்புக்கு இலக்காகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு