பூநகரி- பரந்தன் வீதியை பயன்படுத்தும் மக்களே அவதானம்..! பாலத்தின் பாகங்கள் திருடப்பட்ட நிலையில் இடிந்து விழும் நிலையில் பாலம்..

ஆசிரியர் - Editor I
பூநகரி- பரந்தன் வீதியை பயன்படுத்தும் மக்களே அவதானம்..! பாலத்தின் பாகங்கள் திருடப்பட்ட நிலையில் இடிந்து விழும் நிலையில் பாலம்..

பூநகரி- பரந்தன் வீதியில் 14ம் கட்டை பகுதியில் உள்ள பாலம் ஒன்றின் பாகங்களை திருடர்கள் திருடி சென்றுள்ள நிலையில் குறித்த பாலம் ஊடாக பயணிக்கும் மக்கள், கனரக வாகனங்கள் மிக அவதானமாக இருக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. 

இரும்பினாலான குறித்த பாலத்தின் முக்கிய பாகங்கள் பலவற்றை திருடர்கள் திருடி சென்றிருக்கின்றனர். இதனால் பாலம் தற்போது ஆபத்தில் உள்ளது. எனவே கனரக வாகனங்கள் சுமையுடன் பயணிக்கும்போது மிக அவதானமாக இருக்குமாறும், பயணிகள் பேருந்துகள் பயணிகளை இறக்கிவிட்டு 

பாலத்தை கடந்த பின்னர் மக்களை ஏற்றுமாறும் கேட்கப்பட்டிருக்கின்றனர். தினசரி நுாற்றுக்கணக்கான மக்கள் பயணிக்கு குறித்த பாலத்தின் பாகங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடாத்திவருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு