சமூக சேவகருக்கு அச்சுறுத்தல்-பொலிஸிலும் முறைப்பாடு

ஆசிரியர் - Editor IV
சமூக சேவகருக்கு அச்சுறுத்தல்-பொலிஸிலும் முறைப்பாடு

கல்முனைப் பிராந்தியத்தில் அண்மைக்காலமாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் இளைஞரான ஜெ.சி கிசாந்தன் என்பவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து இன்று (3) கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு சென்று குறித்த சமூக சேவைகள் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டில் இரண்டு ஒவ்வொரு அரசியல் கட்சியில் சேர்ந்து இயங்கும் நபர்களினால் தொலைபேசி ஊடாகவும் நேரடியாகவும் தான் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ் அச்சுறுத்தல் சம்பவம் போலி முகநூல் ஒன்றினை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

அச்சுறுத்தலுக்குள்ளான நபர்அண்மைக்காலமாக கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு வருகிற மக்களுக்காக நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு