யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேலும் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேலும் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது..!

கிளிநொச்சி- முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டி ருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்திய மூர்த்தி கூறியிருக்கின்றார். 

தென்னிலங்கையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உள்ளமை பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஜாஎலயைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவருக்கு 

நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று மற்றொருவருக்கும் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு