மகிழ்ச்சியான செய்தி..! யாழ்.மாவட்டத்தில் இன்று 27 பேருக்கு பரிசோதனை, எவருக்கும் தொற்றில்லை..

ஆசிரியர் - Editor I
மகிழ்ச்சியான செய்தி..! யாழ்.மாவட்டத்தில் இன்று 27 பேருக்கு பரிசோதனை, எவருக்கும் தொற்றில்லை..

யாழ்.மாவட்டத்தில் இன்று கொரேனா பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட 23 போில் ஒரு வருக்கும் கொரோனா தொற்று இல்லை. என உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், யாழ்.மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த பரிசோதனையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 பேர், யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட கொழும்பை சேர்ந்த 4 பேர், 

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், நல்லுார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 8 பேர், தெல்லிப்பளை சுகாதார பிரிவுக்குட்பட்ட 8 பேர் என 27 பேர் பரிசோதிக்கப்பட்டிருந்தனர். 

அவர்கள் எவருக்கும் தொற்றுள்ளில்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு