மதுபோதையில் தர்க்கம்..! துப்பாக்கி சூடு நடாத்திவிட்டு தப்பியோடிய 26 வயது நபர் கைது, துப்பாக்கியும் மீட்பு, பல கோணங்களில் விசாரணை தீவிரம்..

ஆசிரியர் - Editor I
மதுபோதையில் தர்க்கம்..! துப்பாக்கி சூடு நடாத்திவிட்டு தப்பியோடிய 26 வயது நபர் கைது, துப்பாக்கியும் மீட்பு, பல கோணங்களில் விசாரணை தீவிரம்..

சம்மந்துறை பகுதியில் மதுபோதையில் இரு குழுக்களுக்கிடையில் உருவான தர்க்கம் துப்பாக்கி சண்டையாக மா றியிருக்கும் நிலையில், துப்பாக்கி சூடு நடாத்திய நபர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டிரு க்கின்றார். இந்த சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

சமந்துறை- செந்நெல் கிராமத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப் பாட்டின் அடிப்படையில் 26 வயதுடைய சந்தேக நபரையும் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு மறைத்து வைத்திருந்த ரீ 56 ரக துப்பாக்கி மற்றும் 9 ரவையுடன் கூடிய ரவைக்கூட்டையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவத்தின் போது இரு துப்பாக்கி வேட்டுக்களை சந்தேகநபர் தீர்த்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. 

மேலும் சந்தேக நபரை நாளை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு