கல்முனை மாநகர சபையினால் அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகை கோபுரம் விசமிகளால் சேதம்

ஆசிரியர் - Editor IV
கல்முனை மாநகர சபையினால் அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகை கோபுரம் விசமிகளால் சேதம்

கல்முனை மாநகர சபையினால் அமைக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதின் பெயர் பலகை கோபுரம் விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாய்ந்தமருது நகர சபை பிரகடனம் என சிலரினால் கூறப்பட்டு குறித்த வரவேற்பு கோபுரத்தில் கல்முனை மாநகர சபை அன்புடன் வரவேற்கின்றது என்கின்ற வாசகம் தற்போது நகர சபை சாய்ந்தமருது அன்புடன் வரவேற்கின்றது என சட்டவிரோதமாக மாற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகரத்திற்கு வரும்   மக்கள் இந்த செயற்பாட்டை கண்டித்து வருவதுடன் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குறித்த கோபுரத்தில் உள்ள வாசகத்தை மீள திருத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த காலங்களில் அரசாங்கத்தினால் சாய்ந்தமருது பகுதிக்கு நகர சபை அந்தஸ்து வர்த்த மானி மூலம் அறிவிக்கப்பட்ட போதிலும் சில தரப்பினரின் எதிர்ப்பின் காரணமாக வாபஸ் பெறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே கல்முனை மாநகர சபை உரிய நடவடிக்கை இச்செயற்பாட்டில் மேற்கொள்வார்களா?

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு