யாழ்.இணுவிலில் தங்கியிருந்த இந்தியா-திண்டுக்கல் பகுதியை சேர்ந்த குடும்பஸ்த்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் திடீர் மரணம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.இணுவிலில் தங்கியிருந்த இந்தியா-திண்டுக்கல் பகுதியை சேர்ந்த குடும்பஸ்த்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் திடீர் மரணம்..

யாழ்.இணுவில் பகுதியில் தங்கியிருந்த தமிழகம்- திண்டுக்கல் பகுதியை சேர்ந்த 36 வயதான குடும்ப பஸ்த்தர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வீரபுத்திரன் மணி (வயது 36)என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்தியாவின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த குடும்பத் தலைவர் இணுவில் பகுதியில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு தலையில் கட்டி உள்ளதாக கூறி யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 7 நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். இந்த இறப்பு தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு