நாயால் அடிதடி..! அடித்தே கொலை செய்யப்பட்ட இளைஞன், முல்லைத்தீவில் கொரூரம்..

ஆசிரியர் - Editor I
நாயால் அடிதடி..! அடித்தே கொலை செய்யப்பட்ட இளைஞன், முல்லைத்தீவில் கொரூரம்..

வீட்டுக்குள் நுழைந்து உணவை திருடிய அயல் வீட்டு நாயை கட்டிவைத்து துன்புறுத்திய இளைஞ ன் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கின்றான். 

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் நே ற்று முன்தினம் இடம்பெற்றிருக்கின்றது. 

அயல் வீட்டு நாள் வீட்டுக்குள் புகுந்த நிலையில் கோபமடைந்த இளைஞன் நாயை கட்டிவைத்து துன்புறுத்தியிருக்கின்றான். இதனால் கோபமடைந்த அயல் வீட்டார்

இளைஞனுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் இளைஞன் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. 

இதனால் படுகாயாமடைந்த இளைஞன் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான் எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். 

இதனையடுத்து சந்தேகத்தின் பெயரில் 3 குடும்பங்களை சேர்ந்த 12 பேரை விசாரணைக்காக அழைத்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு