கொரோனா அப்டேட்: பலி 21 ஆயிரத்தை நெருங்கியது!!

ஆசிரியர் - Editor III
கொரோனா அப்டேட்: பலி 21 ஆயிரத்தை நெருங்கியது!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தினால் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

சீனாவின் ஹ_பேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 196 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை 4 இலட்சத்து 61 ஆயிரத்து 9 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 20 ஆயிரத்து 846 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், 3 இலட்சத்து 26 ஆயிரத்து 364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 799 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் அதிக அளவில் உயிரிழப்பை சந்தித்த நாடுகள் வருமாறு:-

சீனா - 3,281

இத்தாலி - 7,503

அமெரிக்கா - 889

ஸ்பெயின் - 3,445

ஜெர்மனி - 206

ஈரான் - 2,077

பிரான்ஸ் - 1,331

சுவிஸ்சர்லாந்து  - 153

தென்கொரியா - 126

இங்கிலாந்து - 435

நெதர்லாந்து - 356

பெல்ஜியம் - 178

ஜப்பான் - 45

பிரேசில் - 50

கிரீஸ் - 22

இந்தோனேசியா - 58

பிலிப்பைன்ஸ்     - 38

ஈராக் - 29

ஸ்வீடன் - 44

பொர்ச்சீகல் - 43

ஆஸ்திரியா - 30

கனடா - 30

டென்மார்க் - 34

துருக்கி - 44 

ஈக்வடார் - 28

எகிப்து - 21

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு