இந்தியாவை பாதுகாக்க வீட்டிக்குள் இருங்கள்!! -மக்களுக்கு கோலி வேண்டுகோள்-

ஆசிரியர் - Editor III
இந்தியாவை பாதுகாக்க வீட்டிக்குள் இருங்கள்!! -மக்களுக்கு கோலி வேண்டுகோள்-

இந்தியாவை பாதுகாத்துக் கொள்வதற்கு அரசு அறிவித்துள்ள ஊடரங்கு உத்தரவை கடைபிடித்து வீட்டுக்குள்ளேயே இருங்கள் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புpரதமர் மோடியின் உத்தரவுக்கு அமைய 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘தற்போது நம்மை பரிசோதிப்பதற்கான நேரம் இது. இந்த சூழ்நிலையில் அபாயகரத்தை புரிந்து கொண்டு விழித்திட வேண்டியது நமக்கு அவசியமானது. அரசு என்ன சொன்னதோ அதை அப்படியே பின்பற்றுங்கள். 

ஒன்றாக இணைந்திருப்போம். இது ஒவ்வொருவருக்குமான வேண்டுகோள். வீட்டிற்குள்ளே இருங்கள். கொரோனா வைரசில் இருந்து உங்களுடைய குடும்பத்தை காப்பாற்றுங்கள்.

ஊரடங்கு உத்தரவை நீங்கள் உதாசீனம் படுத்தினால் ஒட்டுமொத்த நாடும் மிகப்பெரிய அளவில் விலைகொடுக்க வேண்டியது நிலை ஏற்படும். உங்கள் ஒற்றுமையை காட்டுங்கள். உயிரையும் நாட்டையும் காப்பாற்றுங்கள்’’ என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு