ஆனையிறவில் போா் காலத்தை ஒத்த அதியுச்ச பாதுகாப்பு..! அனுமதி இல்லாமல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற தடை..!

ஆசிரியர் - Editor I
ஆனையிறவில் போா் காலத்தை ஒத்த அதியுச்ச பாதுகாப்பு..! அனுமதி இல்லாமல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற தடை..!

யாழ்.மாவட்டத்திலிருந்து அனுமதியில்லாமல் வெளியேற தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், ஆனை யிறவு சோதனை சாவடியில் இராணுவம் குவிக்கப்பட்டு போா் காலத்தை ஒத்த பாதுகாப்பு வழங்க ப்பட்டிருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. 

பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழிலிருந்து வேறு பிரதேசங்களிற்கு செல் வதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் ஏ9 வீதியில் வீதி மறியல் சோதனைச்சாவடி இன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

அதற்கமைவாக யாழிற்கு செல்ல அனுமதிக்கப்படவதுடன். அங்கிருந்து வெளியேறுவோர் உரிய நடைமுறைப்படி விசேட போக்குவரத்து அனுமதியை பெற்றிருத்தல் வேண்டும் என சோதனைச் சாவடிக்கு பொறுப்பான அதிகாரி தெரிவிக்கின்றார்.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் குறித்த ஆனையிறவு சோதனைச்சாவடி ஊடான போக்குவரத்தில் மடடுப்பாடுகள் வி திக்கப்பட்டுள்ளது. பொலிசாரும் படையினரும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில் பொதுமக்கள் ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகின்றனர். இதேவேளை கிளி நொச்சி நகர் உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களும் வெறிச்சோடிக் காணப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்ட மக்களும் பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை 

இங்கு குறிப்பிடத்தகக்தாகும். வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய செயற்பாடுகள் முடங்கியுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு