யாழ்.செம்மணி தேவாலய ஆராதனையில் கலந்து கொண்ட இருவா் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி..! கொரோனா தொற்று என சந்தேகம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.செம்மணி தேவாலய ஆராதனையில் கலந்து கொண்ட இருவா் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி..! கொரோனா தொற்று என சந்தேகம்..

யாழ்.செம்மணி தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையில் கலந்து கொண்ட இருவா் வவுனியா வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். 

குறித்த இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. கடந்த 15ம் திகதி யாழ். செம்மணி பகுதியில் சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகா் கலந்து கொண்ட

ஆராதனையில் வவுனியாவிலிருந்து கலந்து கொண்ட 8 போ் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனா். இவர்களில் நெளுக்குளத்தை சேர்ந்த ஒருவரும் 

புளியங்குளத்தை சேர்ந்த ஒருவருமாக இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொரனா தொற்று உள்ளதா ?

என்பது தொடர்பிலான கண்காணிப்பு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு