யாழ்ப்பாணம்- பலாலி, கிளிநொச்சி- இரணைமடு, முல்லைத்தீவு- கேப்பாவிலவு பகுதிகளில் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்கள்..! பணிகள் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம்- பலாலி, கிளிநொச்சி- இரணைமடு, முல்லைத்தீவு- கேப்பாவிலவு பகுதிகளில் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்கள்..! பணிகள் ஆரம்பம்..

யாழ்ப்பாணம்- பலாலி, கிளிநொச்சி- இரணைமடு, முல்லைத்தீவு- கேப்பாவிலவு பகுதியில் கொரோனா தனிமைப்படுத்தல் நிலைய ங்களை அமைக்கும் பணிகளை இலங்கை விமானப்படையினா் ஆரம்பித்திருக்கின்றனா். 

இந்த தனிமைப்படுத்தல் நிலையங்கள் விமானப்படை முகாம்களிலேயே அமைக்கப்படவுள்ளது. மேலும் வெளிநாட்டிலிருந்து வரு கிறவா்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க இது பயன்படும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது. 

மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குரிய கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமம் 522ஆவது படை முகாமில் அமைக்கப்படவுள்ளது என்று மாவட்டச் செயலாளர் க.மகேசன் 

பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவித்திருந்தார். அத்துடன், அதற்கு 5 மில்லியன் ரூபா நிதியும் கோரப்பட்டுள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு