கிளிநொச்சியிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் தொடர் களவு..! 24 வயது கள்ளன் பொலிஸாரின் பொறியில் சிக்கினான்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் தொடர் களவு..! 24 வயது கள்ளன் பொலிஸாரின் பொறியில் சிக்கினான்..

யாழ்.குடாநாட்டில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரபல கள்ளனை இன்று காலை இன்று காலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

24 வயதுடைய குறித்த இளைஞர் கிளிநொச்சியை வசிப்பிடமாகக் கொண்டவர் எனத் தெரிய வந்துள்ளது.

யாழப்பாணத்தில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் யாழ் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் 

இன்று அதிகாலை யாழ். பொம்மை வெளிப் பகுதியில் வைத்து யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இவரிடமிருந்து 5 கைத்தொலைபேசிகள் மற்றும் தங்கச் சங்கிலிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு