வெகு சிறப்பாக நடைபெற்ற கச்சதீவு அந்தோனியாா் ஆலய வருடாந்த திருவிழா..!

ஆசிரியர் - Editor I
வெகு சிறப்பாக நடைபெற்ற கச்சதீவு அந்தோனியாா் ஆலய வருடாந்த திருவிழா..!

வரலாற்ற சிறப்புமிக்க கச்சதீவு அந்தோனியாா் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. 

யாழ்.மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் ,காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் , இந்தியா சிவகங்கை மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை லூர்துராஜா, 

தஞ்சாவூர் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் மற்றும் இலங்கை இந்திய குருக்கள் இணைத்து கூட்டுத்ததிருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.

இதன் போது இந்திய துணைத்தூதுவர் பாலசுப்ரமணியம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், முப்படைகளின் தளபதி றியல் அட்மிரல் ரவி விஜயகுணரத்ன, 

யாழ்ப்பாணம் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் றுவன் வணிகசூரிய, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இலங்கை இந்திய பக்தர் சுமார் 7000 பேர் கச்சதீவு புனித அந்தோனியாரை நேரில் தரிசித்தனா். 



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு