வவுனியாவில் ஆவா குழு கைவரிசை! - பெற்றோல் குண்டு தாக்குதல்

ஆசிரியர் - Admin
வவுனியாவில் ஆவா குழு கைவரிசை! - பெற்றோல் குண்டு தாக்குதல்

வவுனியா- பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று இரவு 9 மணியளவில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான வீட்டின் சுவரில் ஆவா குழு என்றும் எழுதப்பட்டுள்ளது.

பண்டாரிக்குளம், கூமாங்குளம் வீதியில் உள்ள வீடு ஒன்றின் முன்னால், மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வீட்டு சுவரில் ஆவா 001 என்றும் எழுதியுள்ளனர்.

வீட்டில் இருந்தவர்களை கூப்பிட்டதாகவும், வீட்டில் இருந்தவர்கள் அச்சத்தினால் வெளியில் வராமையால் கேட் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அப்பகுதிக்கு சென்ற அயலவர்கள் வீட்டாருடன் பேசி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பண்டாரிக்குளம் மற்றும் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னடுத்துள்ளனர்.

விசாரணைகளின் போது மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்த இளைஞன் ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு