இந்தோனேஷியாவில் கடும் வெள்ளம்!! -200இற்க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு-

ஆசிரியர் - Editor III
இந்தோனேஷியாவில் கடும் வெள்ளம்!! -200இற்க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு-

இந்தோனேஷியாவின் தென் பகுதியில் கடும் வெள்ளப் பெருக்கினால், சுமார் 200இற்க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, பல இடங்களில் மின் தடை நீடிக்கிறது. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மக்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

மேலும், வெள்ளம் காரணமாக ஜாவா தீவில் மலையேற்றம் சென்ற பாடசாலை மாணவர்களில் 8 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடத் ஆரம்பத்தில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு 60 பேர் வரை உயிரிழந்தனர். ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு