தென்கொரியாவில் மிக வேகமாக பரவும் கொரோனா!! -9 பேர் சாவு, 893 பேர் பாதிப்பு-

ஆசிரியர் - Editor III
தென்கொரியாவில் மிக வேகமாக பரவும் கொரோனா!! -9 பேர் சாவு, 893 பேர் பாதிப்பு-

சீனாவில் பல உயிர்களை காவு கொண்ட கொரோனா வைரஸ் தற்போது தென்கொரியாவிலும் மிக வேகமாக பரவி வருகின்றது.

இந்த நிலையில், வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நேற்று 763 ஆக இருந்தது. தொடர்ந்து 8,720 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், தென்கொரியாவில் வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை இன்று 893ஆக அதிகரித்து உள்ளது.

அத்தோடு நேற்று 7ஆக இருந்த எண்ணிக்கை, கூடுதலாக 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 9ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து, தென்கொரிய அரசு, தேசிய அச்சுறுத்தல் அளவை சிவப்பு சமிஞ்சை ஆக உயர்த்தியுள்ளது.

தென்கொரியாவில் 4வது பெரிய நகரான டேகு நகரில் 80 சதவீத பாதிப்புகள் உள்ளன. காய்ச்சல் அல்லது சுவாச பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால் வீட்டிலேயே இருக்கும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதிக எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு