வவுனியா விபத்தில் யாழ்ப்பாணம்- காரைநகரை சேர்ந்த பிரபல வர்த்தகர் குடும்பத்துடன் உயிரிழந்த சோகம்..!

ஆசிரியர் - Editor I
வவுனியா விபத்தில் யாழ்ப்பாணம்- காரைநகரை சேர்ந்த பிரபல வர்த்தகர் குடும்பத்துடன் உயிரிழந்த சோகம்..!

வவுனியா- பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றிரவு கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கிப்பயணித்த அரச பயணிகள் பேருந்தும் எதிர் திசையில் பயணித்த சிறிய ரக வானும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து நிகழ்ந்தது.

சம்பவத்தில் ஐவர் உயிரிழந்திருந்தனர். உயிரிழந்தவர்களில் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான பார் சோமு என அழைக் கப்படும் சோமசுந்தம், அவருடைய மகள் சுகந்தி, மருமகன் தேவா, பேரன் தர்ஷன் ஆகியோரும் வாகன சாரதியான ரேனுஷன் ஆகியோரே உயிரிழந்துள்ளான்.

குறித்த வர்த்தகர் கொழும்பு - யாழ்ப்பாணத்தில் பல தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருபவர் என்று காரைநகர் மக்கள் தெரிவிக்கின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு