விபத்துக்குள்ளான நிலையில் குற்றுயிராக கிடந்த வான் சாரதி தீயில் எரிந்து பலி..!

ஆசிரியர் - Editor I
விபத்துக்குள்ளான நிலையில் குற்றுயிராக கிடந்த வான் சாரதி தீயில் எரிந்து பலி..!

வவுனியா- பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இ.போ.ச பேருந்தும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விப த்துக்குள்ளான சம்பவத்தில் வான் சாரதி விபத்துக்குள்ளான வானில் குற்றுயிராக கிடந்த சாரதி தீயில் எரிந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த சம்பவத்தில் 25 பேர் படுகாயமடைந்துள்ளது டன் 5 பேர் பலியாகியுள்ளனர். விபத்து இடம்பெற்றதன் பின்னர் பஸ்ஸிற்கு   அங்கிருந்த சிலரால் தீ வைக்கப்பட்ட நிலையில் வானிலும் தீ மூண்டு அந்த தீயில் அகப்பட்டு வான் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதியின் சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு