வவுனியா- பன்றிக்கெய்த குளத்தில் கோர விபத்து, 4 போ் சம்பவ இடத்திலேயே பலி, வாகனங்கள் தீயிட்டு கொழுத்தப்பட்டதால் பதற்றம்..! 2ம் இணைப்பு..

ஆசிரியர் - Editor I

யாழ்ப்பாணம்- பருத்துறை நோக்கி பயணித்த பேருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோ க்கி பயணித்த வானும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து அடையாளம் தொியா த சில நபா்களினால் வாகனம் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அந்த பகுதியில் பதற்றமான நிலை நீடிப்பதுடன், இந்த கோர விபத்தில் 4 போ் சம் பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளதுடன், பலா் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்  தொிவிக்கின்றன. 

இதன்போது வான் சாரதியும் தீ வித்தில் அகப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வானுமே நேருக்கு நேர் மோதியுள்ளது.

இதன்போது அங்கிருந்தவர்களால் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட போது விபத்துக்குள்ளாகிய வானும் தீயில் எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.காயமடைந்தார்கள் அம்பியூலன்ஸ்களில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் 

நால்வர் உயிரிழந்துள்ள நிலையில் 20 பேர் காயமடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.தீப்பற்றிய வாகனங்கள் தீயணைப்பு படையினரால் அணைக்கப்பட்டுவரும் நிலையில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

2ம் இணைப்பு..

மேற்படி வாகன விபத்தில் உயிரிழந்தவர் கள் எண்ணிக்கை 5 ஆக உயரந்துள்ளது. சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்ப ட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தீயிட்டு கொழுத்தியவர்கள் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு