கொரோனா வைரஸ்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,442 ஆக அதிகரிப்பு!!

ஆசிரியர் - Editor III
கொரோனா வைரஸ்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,442 ஆக அதிகரிப்பு!!

உயிர் கொல்லி கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,442 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றது.

இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன வைத்தியர்கள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,442 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,288 லிருந்து 77,000 ஆக அதிகரித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு