இராணுவ வாகனம் மோதி விபத்து..! இருவா் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
இராணுவ வாகனம் மோதி விபத்து..! இருவா் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்..

செட்டிகுளம் சின்னசிப்பிக்குளம் பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள்  இராணுவ வாகனம் மோ ட்டாா் சைக்கிள் மீது மோதியதில் இருவா் படுகாயமடைந்து ஆவத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். 

இந்த விபத்து நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சின்னசிப்பிக்குளம் பகுதியில் இருந்து செட்டிகுளம் ஹயசிங்கபுர இராணுவ முகாம் நோக்கி‌ச் சென்றுகொண்டிருந்த ஹன்ரர் வாகனத்தின் பின்னால் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் 

வாகனத்துடன் மோதியுள்ளது. இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த சின்னசிப்பி குளத்தைச் சேர்ந்த நௌபர் மிர்ஷட் (24வயது), அப்துல் ஜக்பர் ஜூவான் (22 வயது) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதனிடையே, 

நௌபர் மிர்ஷட்‌ என்ற இளைஞன் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு