புகுமுக மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல்..! விசாரணை அறிக்கை இன்று கையளிக்கப்பட்டது, 3 பேருக்கு அதிரடி தடை, அடுத்தது என்ன..?

ஆசிரியர் - Editor I
புகுமுக மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல்..! விசாரணை அறிக்கை இன்று கையளிக்கப்பட்டது, 3 பேருக்கு அதிரடி தடை, அடுத்தது என்ன..?

யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதை என்ற பெயாில் இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல்கள் தொடா்பான விசாரணை அறிக்கை யாழ்.பல்கலைகழக தகுதிவாய்ந்த அதிகாாி பேராசிாியா் க.கந்தசாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், 

பகிடிவதை என்ற பெயாில் புகுமுக மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் புாிந்த 3 மாணவா்க ள் அடையாளம் காணப்பட்டு வகுப்புத்தடை மற்றும் பல்கலைகழக வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தில் மூத்த மாணவர்கள் சிலரால் புதுமுக மாணவர்களுக்கு மோசமான முறையில் பகிடிவதைக்குட்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பில் ஒழுக்காற்றுக் குழு விசாரணைகளை முன்னெடுத்து வந்தது.

மாணவர் நலச்சேவை உதவிப் பதிவாளர், மாணவர்கள் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், மாணவர் ஆலோசகர்கள், மூத்த மாணவர் ஆலோசகர்கள் அடங்கிய குழு இந்த விசாரணைகளை கடந்த 7ஆம் திகதி தொடக்கம் முன்னெடுத்தது .இந்த ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் 

3 மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகங்களுக்குள் உள்நுழையத் தடை விதித்து நிர்வாகம் பணித்தது. இந்த நிலையில் விசாரணைக்குழுவின் ஆரம்ப அறிக்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமியிடம் 

இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது.இந்த ஆரம்ப அறிக்கை மீதான முறையான விசாரணையை துறைசார் குழுவை அமைத்து தகுதிவாய்ந்த அதிகாரி முன்னெடுப்பார் என்று அறியமுடிகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு