கொரோனாவால் ரத்தான ஜப்பானில் மன்னர் பிறந்த நாள் கொண்டாட்டம்!!

ஆசிரியர் - Editor III
கொரோனாவால் ரத்தான ஜப்பானில் மன்னர் பிறந்த நாள் கொண்டாட்டம்!!

உயிர் கொல்லி கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜப்பானில் மன்னர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், ஜப்பானில் மன்னர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  ஜப்பானில் வழக்கமாக அந்நாட்டின் மன்னர் பிறந்த நாள் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஜப்பான் மக்கள் வீதிகளில் பெருமளவில் கூடி மன்னரின் பிறந்த நாளை கொண்டாடுவர். ஆனால், நிகழாண்டு, மன்னர்  நருஹிட்டோ பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஜப்பானில் கொரோனா வைரசால் ஒருவர் உயிரிழந்துள்ளனர். 414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு