கம்பாளா வீரர் சீனிவாச கவுடா போட்டிகளில் கலந்துகொள்வார்!! -கிரண் ரிஜிஜு-

ஆசிரியர் - Editor III
கம்பாளா வீரர் சீனிவாச கவுடா போட்டிகளில் கலந்துகொள்வார்!! -கிரண் ரிஜிஜு-

மின்னல் வீரர் உஷைன் போல்டின் சாதணையை முறியடித்த கம்பாளா வீரர் சீனிவாச கவுடா போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்  கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  கிரண் ரிஜிஜூ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்  “இந்த வீரரை மத்திய விளையாட்டு அமைச்சகம் தொடர்பு கொண்டுள்ளது. அவர் திங்களன்று இந்திய விளையாட்டு ஆணையம் வந்தடைவார். அவருக்கு தலைசிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும்” என பதிப்பிட்டுள்ளார்.

கர்நாடகாவில் புகழ்பெற்ற பாரம்பரிய விளையாட்டான கம்பாளாவில் வேகமாக ஓடும் எருமை மாடுகளுடன், அதனை இயக்கும் பயிற்சி வீரர் ஒருவர் உடன் ஓடுவார். இந்த போட்டியில் 2013-ம் ஆண்டு முதல் மங்களூருவின் மிஜர் அஸ்வத்பூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாச கவுடா கலந்து கொண்டு வருகிறார்.

கடந்த முதலாம் திகதி நடைபெற்ற போட்டியில் 142.5 மீற்றர் தூரத்தை 13.62 வினாடிகளில் கடந்தார். அத்துடன் 100 மீற்றர் தூரத்தை 9.55 வினாடிகளில் கடந்தார். இது  உசைன் போல்ட்டின் சாதனையையும் முறியடித்துள்ளது.

இந்நிலையில் கம்பாளா வீரர் சீனிவாச கவுடா போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்  கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு