கனகராயன் குளம் பகுதியில் இரு நாட்களாக அதியுச்ச பாதுகாப்பு..! இன்று தோண்டும் பணி ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
கனகராயன் குளம் பகுதியில் இரு நாட்களாக அதியுச்ச பாதுகாப்பு..! இன்று தோண்டும் பணி ஆரம்பம்..

கனகராயன் குளம் பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் தங்கம் மற்றும் ஆயுதங்கள், ஆவண ங்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறி இன்று காலை அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

நேற்று காலையிலிருந்து காணியைச் சுற்றி பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் இன்று குறித்த பகுதியில் பொலிஸார், தடவியல் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர், 

புலனாய்வாளர்கள், கிராம சேவையாளர் ஆகியோர் முன்னிலையில் இயந்திரம் மூலம் நிலத்தை தோண்டும் பணி இடம்பெற்றிருந்தது. சில தினங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் புதையல் தோண்டியதாக சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.  

ருவர் முன்னாள் போராளி என்று தெரிவித்த பொலிஸார் அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்குப் பயன்படும் பிக்கான், அலவாங்கு என்பவற்றுடன் பூசணிக்காய் போன்றவற்றையும் மீட்டிருந்ததாக தெரிவித்திருந்தனர்.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் 10 அடி ஆழம் வரை குறித்த பகுதி தோண்டப்பட்டிருந்த போதும் எதுவும் கிடைக்காததனால் பின்னர் மூடப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு