பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெண்ணின் சடலம் மீட்பு!

ஆசிரியர் - Admin
பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெண்ணின் சடலம் மீட்பு!

வவுனியா, குடியிருப்பு பகுதியில் வவுனியா குளத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலய வளாகத்தில் இன்று (14) காலை பெண்ணின் சடலம் ஒன்றினை காவல் துறையினர்  மீட்டுள்ளனர்.

ஆலய வளாகத்திற்கு அருகே பெண்ணின் சடலம் காணப்படுவதாக காவல் துறைக்கு கிடைத்த தகவலுக்கு இணங்க சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா காவல் துறை , பெண்ணின் சடலத்தினை மீட்டெடுத்துள்ளனர்.

அத்துடன் தடவியல்காவல் துறை  மற்றும் நீதவான் பார்வைக்காக சடலம் காணப்படும் இடத்தினை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குடியிருப்பு - பூந்தோட்டம் வீதிக்கான குளக்கட்டு வீதி போக்குவரத்துத்துக்குகாவல் துறை  தற்காலிக தடை விதித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்த பெண் வவுனியா நகரில் யாசகம் பெற்று வந்த பெண் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக வவுனியா காவல் துறைக்கு  தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல் துறையினர் முன்னேடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு