ஆடைகள், துப்பாக்கி ரவைகள் மீட்பு, மீட்கப்பட்ட எலும்பு எச்சங்கள் 2 பேருடையதாக இருக்கலாம்..! மனித புதைகுழியா..? வலுக்கும் அச்சம்..

ஆசிரியர் - Editor I

மாங்குளம் பகுதியில் புனா்வாழ்வு வைத்தியசாலை அமைப்பதற்காக துாய்மையாக்கப்பட்ட காணியி ல் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் இன்று அகழ்வு மேற்கொள்ளப்பட்டு ஆய்வுகள் நடா த்தப்பட்டிருக்கின்ற நிலையில் பல அதிா்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. 

முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ் .லெனின்குமார் குறித்த இடத்தை நேற்றையதினம் பார்வையிட்டு அந்த பிரதேசத்தை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் அகழ்வு செய்யுமாறு உத்தரவிட்டதுக்கு அமைய இன்றையதினம் மேலதிக அகழ்வு முன்னெடுக்கப்பட்டது .

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தனுசன் தலைமையில் பொலி ஸாா். தடயவியல் பொலிஸாா் மற்றும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினரின் பங்கு பற்றுதலுடன் அகழ்வு முன்னெடுக்கப்பட்டது .

இந்த அகழ்வின்போது சிதைவடைந்த மனித எச்சங்கள் ,துப்பாக்கி ரவைகள் சில , 2 பேருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்க படும் ஆடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மீட்கபட்ட தடைய பொருட்கள் சட்ட வைத்திய பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு