வெறித்தனமாக ஓடிய இ.போ.ச பேருந்து..! தட்டிக்கேட்டவரை தாக்கி சாரதி சண்டித்தனம், தட்டிக்கேட்டு அடிவாங்கியவனை கைது செய்து பொலிஸார் சாதனை..

ஆசிரியர் - Editor I
வெறித்தனமாக ஓடிய இ.போ.ச பேருந்து..! தட்டிக்கேட்டவரை தாக்கி சாரதி சண்டித்தனம், தட்டிக்கேட்டு அடிவாங்கியவனை கைது செய்து பொலிஸார் சாதனை..

விபத்தை ஏற்படுத்தும் வகையில் இ.போ.ச பேருந்தை ஓட்டி சென்ற சாரதியை தட்டிக்கேட்டவா் மீது இ.போ.ச சாரதி மூா்க்கத்தன மான தாக்குதல் நடாத்தியிருக்கும் நிலையில்

தாக்குதலுக்குள்ளானவரை கைது செய்த பொலிஸாா் இ.போ.ச சாரதியை கண்டு கொள்ளாமல் விட்டிருக்கின்றனா். இந்த சம்பவம் இன்று அதிகாலை 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இ.போ.ச சாரதி ஒருவர் விபத்தை உண்டாக்கும் வகையில் பேருந்தை ஓட்டிச் சென்ற நிலையில், அதனை தட்டிக்கேட்ட நபர் மீது 

இ.போ.ச பேருந்து சாரதி மூர்க்கத்தனமான தாக்குதல் நடாத்தியுள்ளார். இதனையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சாரதி தன்னை குறித்த நபர் தாக்கியதாக முறையிட்டுள்ளதுடன், 

தான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், விடுமுறை எடுக்கப்போவதாகவும் கூறிவிட்டு பொலிஸாரின் முன்னாலேயே பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். இதற்கிடையில் சம்பவம் தொடர்பாக 

அங்கிருந்த சிலர் உண்மையை கூறியபோதும் அடிவாங்கியவனை கைது செய்த பொலிஸார் அடித்து சண்டித்தனம் காட்டிய இ.போ.ச சாரதியை சுதந்திரமாக செல்ல அனுமதித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு