பகிடிவதை பெயாில் பாலியல் துன்புறுத்தல் விவகாரம்..! இடை நிறுத்தப்பட்ட மாணவனின் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல், யாழ்.மானிப்பாயில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
பகிடிவதை பெயாில் பாலியல் துன்புறுத்தல் விவகாரம்..! இடை நிறுத்தப்பட்ட மாணவனின் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல், யாழ்.மானிப்பாயில் சம்பவம்..

யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதை என்ற பெயாில் பாலியல் துன்புறுத்தல் புாிந்த குற்றச்சாட்டில் பல்கலைகழக வளாகத்திற்குள் உள்நுழையவும், கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்ட மாணவன் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. 

இன்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின்போது 4 போ் கொண்ட குழு வீட்டுக் குள் நுழைந்துள்ளது. இதன்போது குறித்த மாணவன் வீட்டில் இல்லாமையால் கோபடைந்து வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் வாகனம் ஆகியவற்றை அடித்து நொருக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனா். 

மேற்படி தகவலை மானிப்பாய் பொலிஸாா் உறுதிப்படுத்தியுள்ளதுடன், மானிப்பாய் பொலிஸ் பிாிவுக் குட்பட்ட ஆணைக்கோட்டை மூத்த விநாயகா் கோவிலடியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டுக்குள் நுழைந்த நால்வர், மாணவனை அழைத்துள்ளனர். 

அவர் அங்கில்லாத நிலையில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகள் மற்றும் யன்னல் கண்ணாடிகளை அடித்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.பகிடிவதைக் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 

வளாகங்களுக்குள் உள்நுழைய இடைக்காலத் தடைவிதிக்கப்பட்ட மாணவர்கள் இருவரில் முதலாவதாக இடைக்காலத் தடை அறிவிப்பு வழங்கப்பட்ட மாணவனின் வீடே இன்றிரவு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு