பகிடிவதை என்ற பெயாில் பாலியல் துன்புறுத்தல்..! விசாரணையில் பல தடைகள், பாதிக்கப்பட்டவா்கள் முறைப்பாடு தாருங்கள் ஆளுநா் கோாிக்கை..

ஆசிரியர் - Editor I
பகிடிவதை என்ற பெயாில் பாலியல் துன்புறுத்தல்..! விசாரணையில் பல தடைகள், பாதிக்கப்பட்டவா்கள் முறைப்பாடு தாருங்கள் ஆளுநா் கோாிக்கை..

யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதையின் பெயரால் பாலியல் தொல்லைகள் செய்யப்பட்ட விடயம் தொடா்பான எனக்கு முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை. முறைப்பாடு செய்யப்பட்டால் எந்த தடையும் இல்லாமல் விசாரணை நடாத்தப்படும். 

மேற்கண்டவாறு வடமாகாண ஆளுநா் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தொிவித்திருக்கின்றாா். இது கு றித்து இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து கூறும் போதே அவா் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதைகள் நடைபெற்றமை தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். அதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுப்பதில் சில தடங்கள் உள்ளன.

எனவே பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் ஒருவர் முறைப்பாடு செய்தால் , அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுக்க ஆவண செய்வேன். 

பாதிக்கப்பட்ட தரப்பு தைரியமாக முன்வந்து முறைப்பாடு செய்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கினால் குற்றவாளிகளை தண்டிக்க முடியும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு