பகிடிவதையின் பெயரால் பாலியல் துன்புறுத்தல்..! பெண்கள் அமைப்பு போா் கொடி..

ஆசிரியர் - Editor I
பகிடிவதையின் பெயரால் பாலியல் துன்புறுத்தல்..! பெண்கள் அமைப்பு போா் கொடி..

யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதை என்ற பெயாில் இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். என வலியுறுத்தி பெண் அமைப்பி னால் இன்று காலை கவனயீா்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.   

யாழ்ப்பாணத்தில் உள்ள மகளிர் அமைப்புகள் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பாலியல் வன்முறை மற்றும் பகடி வதைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தனர் “மகிழ்ச்சியான பல்கலைக்கழக 

வாழ்க்கையை மரணத்தில் முடிக்காதே", "தற்கொலை சிந்தனையை தூண்டும் பகிடிவதை தேவைதானா",நாட்டிலும் வீட்டிலும் பெண்கள் சமத்துவத்தைப் பேணுவோம் பாலியல் கல்வி என்பது வாழ்க்கை பாடம் தயக்கத்தை விட்டு கற்றுக்கொள்வோம் 

போன்ற பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்தில் உள்ளுராட்சி சபைகளின் பெண் உறுப்பினர்களும் மகளிர் அமைப்புகளும் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு