தமிழீழ விடுதலை புலிகளின் புதையல் தேடிய 21 பேருக்கும் 13ம் திகதிவரை விளக்கமறியல்..!

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளின் புதையல் தேடிய 21 பேருக்கும் 13ம் திகதிவரை விளக்கமறியல்..!

கிளிநொச்சி- கட்டைக்காடு பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் புதையல் தோண்டிய குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 21 சந்தேகநபா்களையும் எ திா்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளனா். 

கிளிநொச்சி- தரும்புரம், கட்டைக்காடு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதையலை தேடினா் என்ற குற்றச்சாட்டில் 21 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் லெப்டினண்ட் கேணல் தர அதிகாரி உள்ளிட்ட 5 இராணுவத்தினரும் அடங்குகின்றனர்.

சந்தேகநபர்கள் அனைவரும் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டனர்.சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள தரும்புரம் பொலிஸார், சந்தேகநபர்களை கிளிநொச்சி பதில் நீதிவான் தில்லைநாதன் அர்ஜூனா முன்னிலையில் 

நேற்று நள்ளிரவு முற்படுத்தினர். சந்தேகநபர்கள் தொடர்பில் புலன் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் ஏ அறிக்கையை முன்வைப்பதாக பதில் நீதிவான் முன்னிலையில் பொலிஸார் சமர்ப்பணம் செய்தனர்.அதனால் சந்தேகநபர்கள் 21 பேரையும் 

வரும் 13ஆம் திகதி வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க பதில் நீதிவான் தில்லைநாதன் அர்ஜூனா உத்தரவிட்டார். இதேவேளை, சந்தேகநபர்கள் மீது தொல்லியல் ஆய்வியல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுமிடத்து 

பிணை வழங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு